கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.மேலும் இதன் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெய்யும் கனமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடத்தியுள்ளார்.
மேலும் அடுத்துவரும் மழை காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதுடன், அவர்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியா பவானி சங்கரா ?