மின்சார ரெயில்கள் இன்று பகுதியாக ரத்து..!

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.08, 10.56, 11.48 மணி, மதியம் 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மணி, மதியம் 12.20, 1, 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.