நாங்கள் ரீல் நட்சத்திரங்கள், நீங்கள் ரியல் நட்சத்திரங்கள்- நடிகை அனுஷ்கா

பெண் போலீஸ் அதிகாரிகளால்தான் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

நேற்று ஐதராபாத்தில் நடந்த பெண் காவல்துறை அதிகாரிகளுக்கான முதல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக நடிகை அனுஷ்கா, கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, திரையில் எங்களை ஸ்டார்களாக காட்டினாலும் இந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தான் நட்சத்திரம். நாங்கள் ரீல் நட்சத்திரங்கள், நீங்கள் ரியல் நட்சத்திரங்கள்.

உங்கள் கடும் முயற்சி மற்றும் உழைப்பால்தான் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம். உங்கள் தியாகங்கள் உயர்வானவை. இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் நான் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறேன்’ என்று குறிப்பிட்டார்