ஊரடங்கில் இந்த முறை தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான அனுமதிகளும், ஒரே மாதிரியான தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பல செயல்பாடுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதெற்கெல்லாம் அனுமதி?
- அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகளுக்கு அனுமதி.
- உணவு விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
- தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி.
- கேளிக்கை விடுதிகளில் உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவங்கள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.
- தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
- தங்கும் விடுதிகள், உறைவிடங்கள், விருந்தினர் இல்லங்கள், செயல்பட அனுமதி. அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
- அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கபப்ட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
- உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
- டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி. திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
- துணிக்கடைகள், நகைக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
- வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 5-% இருக்கைகளில் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி. திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதி இல்லை.
- மாவட்டத்திற்குள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதி
- SRF/JRF, M.phil, Phd., ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள அனுமதி. இவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதி.
- 15 அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD போன்ற அரசு பயிற்சி நிலையங்கள்/மையங்கள், உரிய காற்றோட்ட வசதியுடன் 50% பயிற்சியாளர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் செயல்பட அனுமதி.
- பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
- மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் மற்றும் இ-பதிவு நடைமுறை ரத்து.