பஞ்சாபில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கை மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் அறிவித்தது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை கடைபிடிக்கப்படுகிறது.

டெல்டா பிளஸ் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பஞ்சாபில் வரும் ஜூலை 10ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்துமாறு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உருமாறி டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 2 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனால் வரும் ஜூலை 10ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பஞ்சாப் அறிவித்துள்ளது.