தமிழகத்தின் டி.ஜி.பி-யாக சைலேந்திர பாபு நியமனம் !

தமிழகத்தில் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தமிழக காவல்துறையில் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பியாக திரிபாதி இருக்கிறார்.

இவரின் பணிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.தற்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய டிஜிபியை முடிவு செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் சைலேந்திர பாபு ஐபிஎஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.