தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை அதிகம் பாதித்தது.இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.தொற்றின் எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் வெள்ளி , சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.