மின்னல் தாக்கி 20 பேர் பலி..!

ஜெய்ப்பூர் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த அமர் அரண்மனை உள்ளது. இங்கு வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நேற்று (ஜூலை 11) மாலையில் மாநிலம் முழுவதும் அதீத மழை பெய்தது. இந்நேரத்தில் பலர் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி அரண்மனை சுற்றுப்பகுதிகளை பைனாகுலர் மூலம் பார்த்து கொண்டிருந்தனர்.

இந்நேரத்தில் மின்னல் தாக்கியது. இதில் 27 பேரில் 15 பேர் பலியாகினர். பலர் கோபுரத்தில் இருந்து குதித்ததில் காயமுற்றனர். பலியானவர்களில் சிறார்கள் 5 பேர் அடங்குவர். காயமுற்ற பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது போல் கோடா, ஜலாவர், பரண் என்ற பகுதிகளில் மின்னல் தாக்கி 6 பேர் பலியாகினர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்

மேலும் மின்னல் தாக்கி உ.பி.,யில் 41, மத்திய பிரசேத்தில் 9 என மொத்தம் பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.