புயல் காரணமாக 32 சிறப்பு ரயில்கள் ரத்து !

யாஸ் புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பை கருதி பல ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயில் மொத்தம் 32 சிறப்பு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

23-ம் தேதி நாகர்கோவில் – கொல்கத்தா ஷாலிமார் (02659), 26-ம் தேதி ஷாலிமார் – நாகர்கோவில் (02660), 24-ம் தேதி ஹவுரா – கன்னியாகுமரி (02665), எர்ணாகுளம் – பாட்னா (02643), தின்சுகியா – தாம்பரம் (05930) ஆகியரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் – ஹவுரா (02822/02821) சிறப்புரயில்கள் 24-ம் தேதி முதல் 26-ம்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் 25-ம் தேதி சென்னை சென்ட்ரல் – சந்திரகாச்சி (02808), எர்ணாகுளம் – பாட்னா (02643), ஹவுரா – திருச்சி (02664) உட்பட பல்வேறு தடங்களில் மொத்தம் 32 சிறப்பு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.