மே 31 வரை தொடரும் ஊரடங்கு – புதுவை !

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கை தொடர முடிவு செய்துள்ளன.கரோனா பாதிப்பு அதிகம் பரவும் மாநிலமாக மகாராஷ்டிரா,கர்நாடகா,கேரளா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில், கடந்த 10ம் தேதி முதல், 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது.

மே 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் தங்களது வீடுகளின் அருகில் உள்ள கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அதிக தூரம் சென்று பெரிய கடைகளில் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.