மாணவர்கள் கவனத்திற்கு..4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை !

cbse-term-1-results-2021-important-announcement-about-result-date
CBSE பருவம் 1 முடிவுகள் 2021

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

நாளை முதற்கட்ட வாக்குப்பதிவும், வரும் 9ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்த 9 மாவட்ட பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று மற்றும் நாளை அதன் பின்பு 8, 9 ஆகிய நாட்களில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு !