லாலு பிரசாத் யாதவ்விற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது !

பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்.சிறையில் இருக்கும் போது அவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டது.

அதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சையில் இருந்து வருகிறார்.லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்ட நான்கு வழக்குகளில், மூன்றில் அவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது டும்கா கருவூலத்தில் பண கையாடல் வழக்கில் அவர் தாக்கல் செய்த மனுவிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

கால்நடை தீவன ஊழல் தொடா்பான 4 வழக்குகளில் 3-இல் அவருக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்துள்ளது.எனவே அவர் சிறையில் இருந்து வீடு திரும்பலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.