விவசாய கடன் தள்ளுபடி தேர்தலுக்கான நாடகம்- கே.எஸ்.அழகிரி

12 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமாகுமா?. இது தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கான நாடகம்.

சசிகலா வருகையால் என்ன நடக்கும் என்பது, சசிகலாவின் அறிவிப்பை பொருத்தே இருக்கும். இலங்கை அருகே 3 தீவுகளில் சீனா கால் பதிப்பது நமக்கு பெரும் அச்சுறுத்தல். எனவே இதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.