ட்விட்டரில் கடிதம் வெளியிட்ட கிரண் பேடி !

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நேற்று விலகினார்.தற்போது ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனுக்கு கூடுதலாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியீட்டுள்ளார் கிரண் பேடி.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது,புதுச்சேரி ஆளுநராக பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவம் என்றும் மேலும் தனக்கு இந்த வாய்ப்பளித்த மத்திய அரசு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் தான் விடா முயற்சியுடன் மற்றும் திருப்தியுடன் செயல் பட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்றும் அது பொது மக்கள் கையில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.