மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் – கேரளா !

கேரள மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களான அப்துல் வகாப், கே.கே.ராகேஷ், வயலார் ரவி ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 21ம் தேதியுடன் முடிவடைகிறது.

மேலும் காலியாக உள்ள அந்த பதவிகளுக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பாணை மார்ச் 24ம் தேதி வெளியிடப்படும். அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 3ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.

மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 5ம் தேதி ஆகும். போட்டி இருந்தால் ஏப்ரல் 12ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.