தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை 331 கோடி பறிமுதல்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து, தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.127.64 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணமும், மேற்கு வங்காளத்தில் ரூ.112.59 கோடி மதிப்புள்ள பொருட்களும், அசாமில் ரூ.63 கோடியே ரூ.75 லட்சமும், கேரளாவில் ரூ.21 கோடியே 77 லட்சமும், புதுச்சேரியில் ரூ.5 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.