அதிகரிக்கும் கரோனா எண்ணிக்கை – தமிழகம் !

கரோனா தொற்று இந்த உலகிற்கு வந்து ஒரு வருடம் கடந்த பின்பும் இன்னும் அதன் தாக்கம் குறையவில்லை.அதன் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகம் இருந்துவருகிறது.

மேலும் பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 8,62,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.