கோவை தெற்கு தொகுதியில் போட்டி – கமல் !

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இன்று இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார் கமல்ஹாசன்.மக்கள் நீதிமய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த கமல்,இப்போது என் வாழ்வின் முக்கிய கட்டத்தில் நிற்கிறேன். கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும். ஆனால் ஊழல் கோட்டையாக கொங்கு பகுதி உள்ளது அதை மாற்ற வேண்டும் என்றார்.