ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளத்தில் குண்டு வெடிப்பு !

ஜம்மு காஷ்மீரில் விமானப்படை தளத்தின் தொழில்நுட்பப் பிரிவு வளாகத்தில் இன்று பயங்கர பயங்கர குண்டு வெடிப்பு.இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து விமானப் படை கூறுவது,ஜம்மு விமானப்படை தளத்தின் தொழில்நுட்பப் பிரிவு வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு வெடிகுண்டு வெடித்ததில் கூரை சேதமடைந்தது.

இன்னொரு குண்டு திறந்தவெளியில் வெடித்தது. எவ்வித பொருள் சேதமும் ஏற்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.