தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் !

கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.தற்போது கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

இன்று தமிழகத்தில் 5,127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,65,874ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 91 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,290 ஆக உயர்ந்துள்ளது.இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 90 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது.