புதுவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா !

புதுச்சேரி சட்டமன்றத்துக்கும் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைந்துள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3, பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர்கள் என புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகை முன் இன்று எளிய முறையில் நடைபெற்றது.

இந்நிலையில் புதுவை மாநில 15 ஆவது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று 2.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. புதுச்சேரி கவர்னர் மாளிகை எதிரில் நடைபெற்ற விழாவில், துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.