தமிழகத்தில் பிரபல மதபோதகருக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு !

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இயேசு அழைக்கிறார் என்கிற மத பிரச்சார அமைப்பை நடத்தி வருபவர் பால் தினகரன்.இவருக்கு சொந்தமாக நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன.

மேலும் இயேசு அழைக்கிறார் என்ற அறக்கட்டளை மூலம் இவர் பல ஏழை,எளிய மாணவர்களுக்கு உதவி வழங்கிவருகிறார் என்று கூறப்படுகிறது.இந்த அறக்கட்டளைக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நிதி உதவி கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

கல்வி நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கிடைக்கும் வருவாய் இவைகளை குறைத்து கட்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக இவர் மீது புகார் எழுந்தன.

மேலும் இது தொடர்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.இதை ஐ.டி ரெய்டில் மொத்தமாக 200 கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பால் தினகரனுடன் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.