திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு !

திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக உறுப்பினர் சி.என். அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து அவருக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப் பட்டதாக கூறப்படுகின்றது.

அங்கே, பணம் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்ததாகக்கூறி, அதன் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து அண்ணாதுரைக்கு சொந்தமான வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.