தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கரோனா தொற்று !

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனால் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சமூக பரவலை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சில நாட்களுக்கு முன்பு கரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமைச்சர் தங்கராஜு அனுமதிக்கப்பட்டுள்ளார்.