Tirumala Tirupati: நாளை ஏழுமலையான் தரிசனம் பிப்ரவரி டிக்கெட் வெளியீடு

Tirumala temple
நாளை ஏழுமலையான் தரிசனம் பிப்ரவரி டிக்கெட் வெளியீடு

Tirumala Tirupati: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெள்ளிக்கிழமை ( ஜன.28ம் தேதி) முதல் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இதை முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். கரோனா தொற்று பரவல் காரணமாக தேவஸ்தானம் திருப்பதியில் அளித்து வந்த நேரடி சா்வதரிசன இலவச டோக்கன்களை தற்காலிகமாக ரத்து செய்து அவற்றையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. பக்தா்கள் முன்பதிவு செய்ய 12,000 டிக்கெட்டுகள் வைக்கப்பட உள்ளன. மேலும் வரும் ஜன.29-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இலவச சா்வதரிசன டோக்கன்களும் இணையதளத்தில் முன்பதிவிற்காக வெளியிடப்பட உள்ளன.

இதை பக்தா்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம். இதற்காக பக்தா்கள் தேவஸ்தானத்தின் இணையதளத்தை தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முடி நீளமா அழகா இருக்கும் ரகசியம் இதுதான்..!