Budget 2022: இந்த ஆண்டும் டிஜிட்டல் முறையில் மத்திய பட்ஜெட்

budget 2022
இந்த ஆண்டும் டிஜிட்டல் முறையில் மத்திய பட்ஜெட்

Budget 2022: பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது அதிகமான பக்கங்களில் அச்சிடப்பட்டு துணிப்பைகளில் கட்டப்படும். இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும்.

இதில் நிதி மந்திரி மற்றும் இணை மந்திரிகள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியுடன் தொடங்கும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தனிமைப்படுத்தப்படுகின்றனர். குடும்பத்தினருடன் தொலைபேசியில் கூட பேச அனுமதி கிடையாது.

பட்ஜெட் ஆவணங்களில் நூற்றுக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படுவதால் ஏராளமான காகிதம் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் தேவைப்படும் காகிதங்கள், அதிகமான மரங்களின் ஆயுளை குறைக்கின்றன.

ஆனால் மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றபின் இந்த பட்ஜெட் பிரதிகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது. முதலில் ஊடகத்தினர், வெளிப்புற பொருளாதார வல்லுனர்களுக்கு அளிக்கப்படும் பிரதிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கொரோனாவை காரணம் காட்டி மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் பிரதிகள் நிறுத்தப்பட்டன.

அதேநேரம் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்களை உருவாக்கி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அச்சிடப்படும் பட்ஜெட் பிரதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளன. அதன்படி இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட் முற்றிலும் பசுமையாகவும், பெரும்பாலும் டிஜிட்டல் முறையிலும் தயாரிக்கப்படுவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டிஜிட்டல் பட்ஜெட் தொகுப்பு பணிகளுக்காக குறைவான எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டும் தற்போது ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: petrol subsidy: வறுமைக்கோட்டு குடும்பங்களுக்கு பெட்ரோலுக்கு ரூ.250 வரை மானியம்