crude oil: 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை உயர்வு

crude oil
7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை உயர்வு

crude oil: கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விநியோகம் கொரோனா 2ம் அலைக்கு இத்தனை நாட்கள் பிறகும் முழுமையாக இன்னும் சீரடையாத நிலையில் உள்ளது தற்போது ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. ரஷ்யா தனது ராணுவத்தை உக்ரைன் எல்லையில் குவித்து வைத்து இருப்பதால் ஐரோப்பாவிற்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது.

இத்தகைய சூழல் உருவாகி உள்ளதால் எண்ணெய் நிறுவனங்கள் திடீரென கச்சா எண்ணெய் விலையை உயர்த்தின. இதில் பிரென் கச்சா எண்ணெய் 2% உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 6756 ரூபாய் வரை சென்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்குப் பிறகு காணப்பட்ட அதிகபட்ச விலையாகும்.

பிறகு விலை சற்று குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 7717 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் லூசியானா லைட் எண்ணெய் 6700 ரூபாய் அதிகமாகவும் வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டர்மிடியேட் எண்ணெய் 6500 ரூபாய்க்கு அதிகமாகவும் விற்பனை ஆகிறது.

நாளுக்கு நாள் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வரும் வேளையில், விநியோக சங்கிலியில் இடர்பாடுகள் பெருகி வருவது விலை ஏற்றத்தை மேலும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: Tirumala Tirupati: நாளை ஏழுமலையான் தரிசனம் பிப்ரவரி டிக்கெட் வெளியீடு