சர்வதேச யோகா தினம் பிரதமர் நரேந்திர மோடியின் உரை !

பிரதமர் மோடியின் பொங்கல் வாழ்த்துக்கள்
பிரதமர் மோடியின் பொங்கல் வாழ்த்துக்கள்

சர்வதேச யோகா தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் ,ஒவ்வொரு மக்களும் யோகாவை தனது வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்.

மேலும் உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக தான் பிராத்தனை செய்வதாக கூறினார். உலகம் முழுவதும் இருக்கின்ற கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக போராடும் போது, ​​யோகா நம்பிக்கையின் கதிராக மாறிவிட்டது என்று யோகாவின் பெருமைகளை எடுத்துரைத்தார்.

மேலும் இந்த கொரோனா தொற்று இருக்கும் கடுமையான காலகட்டத்தில் மருத்துவர்கள், பணியாளர்கள் யோகாவை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் யோகா நமக்கு உள் வலிமையை அதிகரிக்கிறது என்று விளக்கம் அளித்தார்.