ஆல்ஃபா 2பி மருந்துக்கு இந்தியா அனுமதி..!

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு இண்டெர்பெரான் ஆல்ஃபா 2பி எனும் மருந்தான விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


புதிதாக கொரோனா தாக்க்குதலுக்கு 20 வயதுக்குட்பட்டவர்கள், குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்படுவதால் குழந்தைகள் மருத்துவர்களும் திக்குமுக்காடிப் போயுள்ளனர், என்ன டோஸில் கொரோனா மருந்துகளைக் கொடுப்பது உள்ளிட்ட சிக்கல்களுக்கு விடையில்லை.