இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார் !

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு உடல்நல குறைவு காரணமாக காலமானார்.இவர் இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவின் மகள் தான் சந்திர நாயுடு.

மேலும் சந்திரா நாயுடு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சந்திர நாயுடு நேற்று தனது 88-வது வயதில் காலமானார். சந்திரா நாயுடு கல்லூரியில் படிக்கும் போது கிரிக்கெட் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கிரிக்கெட்டில் இருந்த ஆர்வத்தால் சந்திர நாயுடு கிரிக்கெட் வர்ணனையாளர் பணியை தொடங்கினார்.சந்திரா நாயுடுவின் மறைவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.