தொடங்கியது தேர்தல் வாக்குப்பதிவு – தமிழகம் !

தமிழகத்தில் இன்று காலை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம்.

வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து செல்லவேண்டும். கையுறை மட்டுமே வாக்குச்சாவடியில் அளிப்பார்கள்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பாஸ்போர்ட், பான்கார்டு உள்ளிட்ட ஏதாவது 11 அடையாள ஆவணங்களை கொண்டுச் செல்லலாம். வாக்குப்பதிவின் போது வரிசையில் சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும்.