இந்தியர்களை அழைத்துவர காபூல் புறப்பட்டது இந்திய விமானம் !

ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர் தலிபான்கள்.தற்போது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தலிபான்களுக்கு நட்பு கரம் நீட்டியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றதையடுத்து, அங்குள்ள அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றினர்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர, இந்திய அரசு சார்பில் நேற்று சென்ற ஏர் இந்தியா விமானம் 129 பேரை அழைத்துவந்தது.

இன்று மீண்டும் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவர காபூல் நகருக்கு இந்திய விமானப்படை விமானம் சென்றுள்ளது.மேலும் அவர்கள் கூறுவது யாருடைய உரிமையையும் பறிக்க மாட்டோம் இஸ்லாமிய முறையிலான ஆட்சியை வழங்குவோம் என்று தலிபான்கள் கூறி வருகின்றனர்.