அடி தூள்..சென்னையில் டபுள் டக்கர் பாலம் !

இந்தியாவில் முதல் முறையாக சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலையை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து,தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில்நுட்பத்துடன், இந்தியாவிலேயே முதன் முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது.

மேலும் இது சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முதல் அடுக்கில் பேருந்துகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலை ஆக அமைக்கப்படும்.

இரண்டாம் அடுக்கில் அமைய உள்ள நான்கு வழிச் சாலை நேரடியாக மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை செல்லும் என்றும், அதில் கன்டெய்னர் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 வழிச்சாலைகளில் கூடுதல் எடையுடன் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றாற்போல நவீன தொழில்நுட்பத்துடன் பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க : T20 ல் இருந்து தல தோனி ஓய்வு?