இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை !

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருப்பது சமையல் சிலிண்டர்.மேலும் நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலை ஏறுவது அவர்கள் வாழ்க்கையை மிகவும் மோசமடைய செய்கிறது.

மேலும் இந்த மாதம் பண்டிகைகள் நெருங்கும் மாதம் என்பதால் சமையல் சிலிண்டர் அதிகம் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.தற்போது மீண்டும் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை 915.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த வருடத்தில் சிலிண்டர் விலை அதிகம் ஆகிக்கொண்டே போகிறது.

தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ வர்த்தக கேஸ் சிலிண்டர்களின் விலையும் 43.50 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !