மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு – முதல்வர் ஸ்டாலின் !

கரோனா தொற்றின் 2 ம் அலை மக்களை மிரட்டி வருகிறது.இதனை தடுக்க தடுப்புசி ஒன்றே வழி என்று மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கடுமையான சூழலில் கரோனா உடன் போராடும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 30,000 அளிக்கப்படும் .

செவிலியர்களுக்கு 20,000 ரூபாய், இதர பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் தரப்படும் என்றும் கூறியுள்ளார்.பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு 20, 000 ரூபாய் தரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.