அட இப்படி கூட நடக்குமா..போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் – மகாராஷ்டிரா !

நாடுமுழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 31 ஆம் தேதி நடைபெற்றது.இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமி நாசினியினை அளித்துள்ளனர்.இந்த செய்தி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் தவறுதலாக சுகாதார ஊழியர்கள் சானிடைசரை கொடுத்துள்ளனர்.இதனால் , குழந்தை ஒன்று வாந்தி எடுக்க, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பெற்றோர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சுகாதார ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 12 குழந்தைகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.