சட்டசபையில் இன்று அமளி..திமுக வெளிநடப்பு !

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை இன்று காலை 11 மணிக்குக கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் புரோகித் உரையாற்றினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து அவர் தனது உரையை வாசிக்கத் தொடங்கியதும், திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்பு குரல் எழுப்பினர்.மத்திய அரசு இந்த முறை ஒரு லட்சம் கோடிக்கு மேல் திட்டங்களை தமிழகத்துக்கு ஒதுக்கிய நிலையில் இப்படிச் செயல்படுவது தவறு என்று அவர்களிடம் கவர்னர் கூறினார்.

சட்டசபையில் கவர்னர் உரையாற்றத் தொடங்கியதும் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.