கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை !

Tn news
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.