மக்கள் கவனத்திற்கு…பாலியல் தொல்லைக்கு புகார் அளிக்க புதிய எண் !

கோவையில் பாலியல் பாலியல் தொல்லையால் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இறந்த அந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மேலும் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியது,மாணவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக பட்டால் உடனடியாக ஆசிரியர்களிடம் கூறலாம் அவ்வாறு கூற பயமாக இருந்தால் உடனடியாக 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

நீங்கள் புகார் அளித்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த புகார் அளிக்கும் மாணவியின் பெயர் வெளியில் வராது எனவும் அவர் கூறினார்.