மாஸ்க் அணியாவிட்டால் சிறைதண்டனை – நீலகிரி !

கரோனா தொற்று வந்த பிறகு முகக்கவசம் என்பது கண்டிப்பான ஒன்றாயிற்று.தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து முககவசம் அணியாதவர்களுக்கு பொது சுகாதார சட்டத்தின் கீழ் 6 மாதம் சிறை என நீலகிரி ஆட்சியர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

எனவே இந்த மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், அந்தந்த மாவட்டங்களில் மாஸ்க் அணிவதைக் கட்டாயப்படுத்தியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.