தேர்தல் களத்தை தனியாக சந்திக்க முடிவு – தேமுதிக !

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் ,அணைத்து கட்சிகளுக்கு தங்கள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தகவல் வெளியிடுகின்றன.தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, கூட்டணியில் இருந்து விலகியது.

மேலும் கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், டிடிவி தினகரனின் அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

தற்போது அமமுகவுடனான பேச்சுவார்த்தையையும் நிறுத்திவிட்டு, தமிழகத்திலும் தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அமமுகவுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு, தமிழகம் முழுக்கவே தனித்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.