கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வடதமிழ்நாட்டை ஒட்டிய ஆந்திர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரியில் நாளை (30-ந் தேதி) கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 1, 2 ஆகிய 2 நாட்களில் வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரள- கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.