மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வினியோகம்

தமிழகம் முழுவதும் பள்ளி-கல்லூரிகள் வருகிற 1-ந்தேதி முதல் திறக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ- மாணவிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகள் சுகாதார முறையில் பள்ளிகளில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் தாக்கத்தை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையிலும் மாணவ- மாணவிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை மூலம் சத்து மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட உள்ளன.