அண்ணா நினைவு தினம்: டுவிட் செய்த இபிஎஸ், ஓபிஎஸ்

அண்ணா நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்கி மகிழ்கிறேன் என முதல்வர் பழனிசாமி தனது டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார்.

பழனிசாமி ட்விட்டர் பதிவு, தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் டுவிட் பதிவில், “தமிழை சுவாசித்தவர்;தமிழர்களை நேசித்தவர்;ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.