தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது..!

Omicron sub-variants
புதிய ஒமைக்ரான் துணை வகைகள் கண்டுபிடிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

தற்போது தினமும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 52 ஆயிரம் பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 510 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 500 ஆக குறைந்து வருவதாலும் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.