இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 ஆவது நினைவு தினம்

மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நிறைவு பெற்றது. அங்கே, அண்ணா சமாதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.