மீன்குழம்பு வைக்காத மனைவியை கோடரியால் வெட்டிய கணவன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீன்குழம்பு வைக்காத மனைவியை ஆத்திரமடைந்த கணவன் கோடரியால் வெட்டிய கொடுரம் அரங்கேறியுள்ளது.

ஒராண்டிற்கு முன்பு பெற்ற தாயை கொன்றுவிட்டு சிறைசென்று ஜாமீனில் வெளியே வந்தவர் பாண்டி . தற்போது மீன்குழம்பு வைத்து தராத மனைவியை கோடரியால் வெட்டிவிட்டு மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் 68 வயதான பாண்டி. ஆட்டோ ஒட்டுநரான இவர், முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது மனைவி 53 வயதான கண்ணகியுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 21 வயதில் நாகேஷ்வரன் மற்றும் 15 வயதில் ஒரு மகன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். ஏற்கனவே முதல் மனைவியின் மூக்கையும் காதையும் அருத்த வழக்கும் இவர் மீது உள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்துள்ளனர். அவர்கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அருகில் இருந்த கிணற்றில் இருந்து மனைவியை வெட்ட பயன்படுத்திய கொடரியை கைபற்றியுள்ளனர். மீன்குழம்பு வைக்காத மனைவியை குடிகார கணவன் கொடரியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.