கண்களை அழகாக பாதுகாக்க சில டிப்ஸ் !

நாம் மற்றவரை பார்க்கும் பொது முதலில் வசீகரமாக தோன்றுவது நம் கண்கள் தான்.கண்கள் அழகாக இருந்தால் மற்றவர் மனதில் சுலபமாக குடி ஏறிவிடலாம்.அத்தகைய கண்களை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.

தினமும் இரவு தூங்க செல்லும் முன்பு கண் இமைகளில் விளக்கெண்ணெய் இரண்டு சொட்டுகள் விட்டு வர வேண்டும். மேலும் கண் இமைகளின் மீது பன்னீரை பஞ்சில் நனைத்து தேய்க்க வேண்டும்.இப்படி செய்வதன் மூலம் கண் இமைகளின் நிறம் கூடும்.

அடுத்து உருளைக்கிழங்கை அரைத்து கண்களை சுற்றி பேக் போட்டால் கருவளையம் குறைந்து விடும்.இதை வரம் 3 முறை செய்யலாம்.மேலும் வெண்ணை மற்றும் கொத்தமல்லி சாறு கலந்து கண்களை சுற்றி பேக் போட்டு வந்தால் கருவளையம் நீங்கி கண்கள் பிரகாசம் பெரும்.