சசிகலா நலமாக உள்ளார்- டி.டி.தினகரன்

சசிகலா விடுதலை ஆவதற்கு மிகவும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது.

அவருக்கு காய்ச்சலும், மூச்சுத்திணறலும் இருந்ததாகவும், இதனையடுத்து சிறைத்துறை மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சசிகலா சிகிச்சை பெற்று வரும் பெங்களூரு சிவாஜிநகர் அரசு மருத்துவமனைக்கு இன்று டி.டி.தினகரன் சென்றுள்ளார்.

அப்போது பேசிய அவர், சசிகலா ஒருவாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ள தேவையில்லை. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சசிகலாவை சந்தித்த பின்னரே முழுமையாக எதையும் கூற முடியும் என தெரிவித்துள்ளார்.