மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !

holiday-for-schools-and-colleges-in-erode
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது நவம்பர் 1 ம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் ன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு !